செங்கல்பட்டு, மார்ச். 8- அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து கள் நின்று செல்லும் பயண வழி உணவ கங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவு கள் விற்கப்படுவதாகவும் பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்டவை அதிகபட்ச சில்லறை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் வந்ததன் இதையடுத்து அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக விழுப்பும் கோட்டத்திற்கு சொந்தமான ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகத்தில்அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் விக்ரவாண்டி பகுதி யிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட உணவ கங்களில் மட்டுமே அரசுப் பேருந்து களை நிறுத்த வேண்டும் என்று போக்கு வரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அந்த உணவகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை செல்லும் சாலையில் ஏதும் இல்லாத நிலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் விருப்பம் போல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல தனியார் உணவகங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். போதிய கழிவறைகள் இல்லாத இந்த உணவ கங்களுக்கு செல்வோர் சாலையோரங்க ளில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் மூடப்பட்டுள்ள மாமண்டுர் பயண வழி உணவகத்தை கடுமையான நிபந்தனை களுடன் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இதுபோன்ற நிலையை தவிர்பதற்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் உணவகங் களை நடத்த அரசு முன்வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்ற கோரிக் கையை பொதுமக்களும் விடுத்துள்ளனர்.