கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட சிஐடியு சார்பில் தொடர் முழக்க போராட்டம் கல்பாக்கம் ஜிஎஸ்ஒ அலுவலகம் முன்பு மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், வி.ஆதிமூலம் (ஏஐடியுசி), எஸ்.சேஷாத்திரி(தேமுதிக), செங்கழனி (தமிழக மீனவர் விடுதலை வேங்கை ), எம்.குமார், பி.கே.ரபிக், செல்வகுமார் (சிபிஎம்), ச.சுரேஷ் (தமிழக வாழ்வுரிமை கட்சி), சரவணன்(பாமக), எழில்மலை, வேலு பிரபாகரன் (விசிக) உள்ளிட்ட பலர் பேசினர்.