வேலூர். ஜூன் 27 - விஐடி பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலை முறை செயற்கை நுண்ண றிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விஐடி நிறுவனரும் வேந்தர் டாக்டர். கோ.விசு வநாதன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி, நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவர் பொன்னி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். விஐடி துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங் துறை டீன் டாக்டர்.எஸ்.சிவானந் தம், நோக்கியா லேப்ஸ் தலைவர் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்து ணர்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க. கோவர்தன் ஆகி யோர் உடனிருந்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5G, செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப் பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப் பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வுப் துறைகளில் கவனம் செலுத்தும்.