districts

img

ஓட்டேரி ஏரியின் நடுவில் செயற்கை தீவு அமைக்க முடிவு

வேலூர், செப். 11- வேலூர் மாநகராட்சிக்கு ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஓட்டேரி ஏரி நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்தாண்டு பெய்த கனமழையால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ஓட்டேரி ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. திறக்கப்படாமலேயே இருந்த பூங்கா மறு சீரமைப்புக்காக மீண்டும் ரூ.25 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்தும் பூங்கா மட்டும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், கட்டிடங்கள் பாழடைந்து வரு கின்றன. மேலும், புதர்கள் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வரு கிறது. ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்ட பூங்கா பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வருகிறது. பூங்காவை விரைவில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஓட்டேரி ஏரியை ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் ஞாயிறன்று (செப். 11) ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில், பூங்காவில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்ப டவுள்ளது. பூங்காவில் 25 லட்சம் ரூபாய் அளவுக்கு பணிகள் முடிக்க வேண்டியுள்ளன. அந்த பணி களை விரைந்து முடிக்கவும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் செயற்கை தீவு அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றம் செய்வது குறித்து அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளது' என்றார்.

;