சாத்தூர், ஆக.18 - கடந்த ஜூலை மாத இறுதியில், கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரு கிரா மங்கள் மண் சரிவில் சிக்சிய நிலை யில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த னர்.
இதையடுத்து, பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள கேரள மாநிலத்திற்கு அரசியல் கட்சிகள், சினிமா பிரப லங்கள் உட்பட பலர் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர், வயநாட்டிற்கு நிவாரண நிதி திரட்ட “மொய் விருந்து” என்ற வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்ட னர். நிவாரண நிதி வழங்க மனமுள்ள வர்கள், மொய் விருந்தில் கலந்து கொள் பவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்படும். பின்னர், உணவருந்திய வர்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆக.15 சுதந்திர தினத்தன்று இந்த மொய் விருந்து நிகழ்ச்சி சாத்தூரில் மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிதி களை வாரி வழங்கினர்.
விருதுநகர் மாவட்டத்திலேயே மிகச் சிறிய ஊரான சாத்தூரில் உணவுக் கான செலவு போக ரூ.4.50 லட்சம் நிதியை உணர்வுபூர்வமாய் பொது மக்கள் வாரி வழங்கினர். திரட்டப்பட்ட நிவாரண நிதியை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, அலெக்ஸ், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் ஆறுமுகம், குச்சி கம்பெனி நிர்வாகி ரவி ஆகியோர் கேரள முதல்வர் பின ராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினர்.