விருதுநகர், ஜூலை 9- விருதுநகர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணைப் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறை, கோவில் ஆய்வுத் திட்டம் (தென்மண்ட லம்), சென்னை அலுவலகத்தின் கண் காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ் ணன் தலைமையிலான குழுவினர், தமி ழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் அதிகம் அறியப்படாத கோவில் களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் அருகே கோல்வார்பட்டியில் சிவன் கோவிலை ஆய்வு செய்தனர். மேலும், கோல்வார் பட்டியிலிருந்து ஏ.புதுப்பட்டி மற்றும் நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அர்ஜூனா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கோல்வார் பட்டி அணையின் மதகுகளுக்கு முன்னால் இடது கரையில் உள்ள பாறையில் (கருப்பசாமி கோவிலின் பீடத்திற்கு பின்னால்) செதுக்கப்பட்ட கல்வெட்டு இருப்பது தெரியவந்தது.
இக்கல்வெட்டானது, பாறையில் 1.5 அடி சதுர வடிவமாக செதுக்கப் பட்டுள்ளது. அதில் தமிழ் எழுத்துக்கள் அழகாக வெட்டப்பட்டுள்ளது. கல் வெட்டின் கீழ்ப்பகுதி எழுத்துக்கள், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அர்ஜூனா ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ள தால் இது நீர்மேலாண்மை அல்லது நீர்ப்பாசனம் குறித்த கல்வெட்டாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இதனை ஆராயும் பொழுது பிற தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேற்பகுதி எழுத்துக்கள் படித்தறி யும் நிலையில் உள்ளது.
அதில், எம் மண்டலமும் கொண்டருளிய குல சேகர தேவர் எனவும், அவருடைய 28 ஆம் ஆட்சியாண்டினையும் குறிப்பிடு வதைக் காணமுடிகிறது. அதன்படி காலக்கணக்கீடு செய்தால் 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர் மன் குலசேகரனுடைய கல்வெட்டாகக் கருதலாம். மேலும், கோல்வார்பட்டி சிவன் கோவிலின் முன்புறம் உள்ள தனிக்கல்லில் குலசேகரனின் 16 ஆம் நூற்றாண்டு ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவினரால் செந்நெல்குடியில் உள்ள பழமையான கோவிலில் உள்ள கல்வெட்டுகளும் ஆவணப்படுத்தப்பட்டன.