districts

img

பழனியில் உலக எழுத்தறிவு தினம்

பழனி, செப்.11- பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு  அறிவியல் இயக்க பழனி கிளை சார்பில் திங்களன்று உலக  எழுத்தறிவு தின விழா கூட்டம் நடைபெற்றது.  கிளைத் தலைவர் சிராஜ் நிஷா தலைமை வகித்தார். கிளைச் செயலர், கவிஞர் சோ. முத்துமாணிக்கம் வர வேற்றார். அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேரா.சோ.மோகனா அறிமுக உரை நிகழ்த்தினார்.  அறிவியல் இயக்க திண்டுக்கல் மாவட்டச் செயலர்  சு.இராசு, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் இராசேந்தி ரன், அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் மற்றும்  நுகர்வோர் அமைப்பின் பொறுப்பாளர் தேவதாஸ் மற்றும்  தமுஎகச பழனி கிளைத் தலைவர் முனைவர் பேரா. மீனா சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பள்ளி மேலாண்மைக் குழு மாநில கருத்தாளர் செல்லத்துரை, “இன்றைய சூழலில் எழுத்தறிவும் சமூக  நிலையும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். கருத்தாளருக்கு ஓய்வூதியர் ஆசிரியர் சங்க மேனாள் மாநில பொதுச் செயலர் பிரபாகரன் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.  தமுஎகச பழனி கிளைச் செயலர்  பழனிகுமார் நன்றி கூறினார். தேனியில் மாவட்ட அளவிலா