districts

பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்! மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அறிக்கை

மதுரை, ஆக.26- இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி,  78ஆவது சுதந்திரத் தினத்தன்று, தலைநகர் புது தில்லியில் ஆற்றிய உரையில், மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை இந்தியா ஏற்க  வேண்டும் என்று அழுத்தமாக அறிவுறுத்தி யுள்ளார். இந்தியக் கிறிஸ்தவம் இக்கோரிக்கை யை ஏற்காது; ஏற்க முடியாது என்றும் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.

பன்மை எனும் ஜனநாயகப் பண்பிற்கு முர ணாக ஒற்றையை அல்லது ஓர்மையை தன் அர சியல் கொள்கையாகக் கொண்டு ஆட்சியேற்றி ருக்கும் இன்றைய அரசின் இக்கோரிக்கையை நிராகரிக்கின்றோம். பொது சிவில் சட்டம் பன்முகச் சமூகங்களின் தனித்த அடையாளத்திற்கு எதிரானது; இந்திய பன்முகக் கலாச்சார விழுமியங்களை கேள்விக்குள்ளாக்குவது; இந்தியாவின் பல் சமயங்கள் தமது தனித்த அடையாளங்களைப் பேணுவதால், சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு வருவதில்லை.

மதச்சார்பற்ற அரசமைப்பைக் கொண்ட இந்தியா, மத வேறுபாடுகளையும், அம்மதங்களின் இருப்பையும் மதிக்கிறது. சமமாக நடத்துகிறது.  மதச்சார்பற்ற நாடு மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்துவதில்லை. மதச்சார் பற்ற நாடு பொது சிவில் சட்டத்தை ஏற்காது என்பதே உண்மையாயிருக்க, மதத்தின் அடிப் படையில் மக்களைத் துருவப்படுத்தி, மதப் பெரும்பான்மையின் மூலம் பெரும்பான்மை வாத அரசை நடத்தி வரும் ஓர் அரசு, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுவது வேடிக்கை யாக உள்ளது.  

இன்றைய ஆளும் பாரதிய ஜனதா  கட்சி மக்களவைத் தேர்தல்களில், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாகச் சொல்லி வந்த போதும், கடந்த இரு முறையும் நடை முறைப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திராத நிலையில், கூட்டணி தயவில் ஆட்சிக் கட்டி லேறியிருக்கும் மோடி அரசு, மதச்சார்பற்ற என்ற ஆடையோடு மீண்டும் பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகிறது.  இந்தப் போக்கை ஜனநாயகத்தையும் பன்மைப் பண்பின் விழுமியங்களையும் நம்பும் கிறிஸ்தவ மதச் சிறுபான்மையினர் ஏற்க மாட்டோம் என்று உறுதியாக அறிவிக்கிறோம்.

இந்திய நாட்டின் மதச்சார்பற்ற அர சமைப்பை நம்பும் ஜனநாயக சக்திகள் பன்மைக் குணமிக்க சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தனித்த வழியை சிதைக்கும் “பொது” என்று பொய்ச் சொல்லை நம்பிவிட மாட்டார்கள். இச்சக்திகளோடு நீண்ட வர லாறும், செறிவான பண்பாட்டு விழுமியங்களை யும் கொண்ட கிறிஸ்தவம் இதை ஏற்காது என்ப தனை அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பு கிறேன். இவ்வாறு பேராயர் அந்தோணி பாப்பு சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.