districts

விருதுநகர் சந்தை பாசிப் பருப்பு விலை உயர்வு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை குறைவு

விருதுநகர், செப்.8- விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்  பின் விலை திடீரென உயர்ந்து காணப் பட்டது. சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் துவரை, உருட்டு உளுந்து  ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள் ளது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு வகையானது கடந்த வாரம் ரூ.10,500 என  விற்கப்பட்டது. இந்த வாரம் பல மாநிலங்க ளில் இருந்து அதிகமாக விளைவிக்கப்பட்ட துவரம் பருப்பு சந்தைக்கு வந்ததால் மூட்  டைக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.10,300 என விற்கப் படுகிறது. இதேபோல் துவரம் பருப்பு நயம் வகை யானது 100 கிலோ கடந்த வாரம் ரூ.14,900 முதல் ரூ.15,100 வரை விற்கப்பட்டது. இந்த  வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந் துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.14,800 முதல் 15 ஆயிரம் வரை விற்பனையா கிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ  நாடு வகை ரூ.12,200 என விற்கப்பட்டது. இந்த வாரம் உள்நாட்டில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து சந்தைக்கு அதிக மாக வந்த காரணத்தால் விலை குவிண்டா லுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது. எனவே,  மூட்டை ஒன்று ரூ.12ஆயிரம் என விற்கப்படு கிறது. இதேபோல் தொலி உளுந்தம் பருப்பா னது 100 கிலோ ரூ.9600 என விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, ரூ.9400 என விற்பனையாகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.10,100 முதல்  10, 300 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலை யில், சந்தையில் வரத்து குறைந்த கார ணத்தால் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை  உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, குவிண் டால் ஒன்று ரூ.10,300 முதல் 10,500 வரை தற்போது விற்கப்படுகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.