ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.26- ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா, கலசலிங்கம் கல்விக் குழு மங்களின் தலைவர் முனை வர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனை வர் எஸ்.கோபாலகிருஷ் ணன், வரவேற்று ஆண்டறிக் கையை சமர்ப்பித்தார். 2020-2023ல் பயின்ற பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம்., எம்.காம்., எம்.எஸ்.சி., மாண வர்கள் 498 பேருக்கு பட்டங்க ளையும், பல்கலை தரவரி சையில் இடம்பெற்ற 21 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், கல்லூரியின் செயலாளர் டாக்டர் எஸ். அறிவழகி, துணைத்தலை வர் எஸ்.சசி ஆனந்த் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். உலக மாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தொட ர்ந்து தங்கள் துறையிலும், வேலையிலும் வளர்ந்து வரும் முன்னேற்றத்தை அறிந்து கொண்டு அதனைப் பயன்படுத்துவது, தங்கள் படிக்கின்ற கல்லூரிக்கும், பெற்றோருக்கும், மக்க ளுக்கும் இயன்ற அளவு உதவி புரிவதும் மாணவர் களின் முக்கிய கடமைகள் என்று துணைத்தலைவர் பட்டமளிப்பு விழாவில் பேசி னார்.