districts

img

வைகாசி விசாகத் திருவிழா : ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி,  மே 16- திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழு மைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.