districts

img

இராஜபாளையத்தில் முதியோர்க்கான தடுப்பூசி முகாம்

இராஜபாளையம், செப்.18- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் மூத்தோர் நல சங்கம் சார்பில் முதியோர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  பாரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் ஓய்வு பெற்ற ஆசிரியை ராமதிலகம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் அக்ரி டி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்க தலைவர் கே.பெத்து ராஜா தலைமை உரையாற்றினார். மேலும் இராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாரியப்பன், டாக்டர் குமரேசன் உள்பட பலர் பேசினர்.  முடிவில் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.