districts

img

கன்வார் யாத்திரைக்காக 17,607 மரங்களை அழித்த உ.பி., பாஜக அரசு

லக்னோ உத்தரப்பிரதேசம், உத்தர கண்ட், மத்தியப்பிர தேசம் ஆகிய மாநி லங்களில் கங்கை நதிக்கரை யையொட்டிய புனித தலங்க ளுக்கு சிவனை வழிபடும் பக்தர்கள் நடைபயணமாக சென்று கலசங்களில் புனித நீரை எடுத்து வந்து, தங்கள் ஊர்களில் உள்ள சிவன்  கோவில்களில் அபிஷேகம் செய்வது வழக்கம். இதனை  கன்வார் யாத்திரை என்று அழைப்பார்கள். இந்நிலையில், இந்த கன்வார் யாத்திரைக்காக உத்தரப்பிரதேசத்தில் 17,607 மரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,“உத் தரப்பிரதேசத்தின் 3 மாவட் டங்களிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை 12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப் பட்டது. எனினும் கன்வார் யாத் திரை நடைபாதையில் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும் 33,776 மரங்களை மட்டுமே வெட்ட அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மரங்கள் பாதுகாப்புச் சட்டத் திற்கு உட்பட்டு கணக்கிடப் பட்டதா என்பதை உத்தரப்பிர தேச அரசு தெளிவுபடுத்தி, அம் மாநில சுற்றுச்சூழல் துறை கூடு தல் தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்” என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரப்பிர தேச பாஜக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  ஒரு லட்சத்தை தாண்டும் கன்வார் யாத்திரை பாதைக் காக உத்தரப்பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக  தேசிய பசுமை தீர்ப்பாயத்தி ற்கு கூடுதல் புகார் வந்துள்ளது. முராத்நகர் (காஜியாபாத்), புர்காஜி (முசாபர்நகர்), மீரட் உள்ளிட்ட வழித்தடத்திற்காக காஜியாபாத், மீரட், முசாபர் நகர் ஆகிய 3 வனக் கோட்டங்க ளில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்த மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான விசாரணைக்குப் பிறகே கன் வார் யாத்திரைக்காக உத்த ரப்பிரதேசத்தில் எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.