districts

img

மதுரையில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலங்களை கண்டறிந்து பட்டியலின மக்களுக்கு வழங்கிடுக!

மதுரை, செப்.4-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட 4 ஆவது மாநாடு, கே.கே. நகரில் உத்தப்புரம் போராளி தோழர் க. பொன்னையா நினைவரங்கில் (நீதி யரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கம்யூ னிட்டி ஹால்) செப்டம்பர் 4 ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆஞ்சி, ஆர்.சசி கலா, எஸ்.பாலகிருஷ்ணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநி லக்குழு உறுப்பினர் செ.முத்து ராணி வரவேற்றுப் பேசினார். மாவட்ட  துணைச்செயலாளர் எஸ்.எம். மோகன்காந்தி அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். துணைப் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்  மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்டச் செயலாளர் எம்.  பாலசுப்பிரமணியன் வேலை யறிக்கையும், பொருளாளர் என்.பி. ரமேஷ்கண்ணன் வரவு -செலவு அறிக்கையும் சமர்பித்தனர். ஆதித்  தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கை யன், விசிக வடக்கு மாவட்டச் செய லாளர் வெ.பு.இன்குலாப், சோக்கோ அறக்கட்டளை இணை  இயக்குநர் எஸ். செல்வகோமதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநி லத் தலைவர் த.செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. பாலமுருகன் நன்றி கூறினார்.

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் இளம் தம்பதியினரை சாதி யின் பெயரில் ஆணவக் கொலை கள் செய்வது தொடர்ந்து அதி கரித்து வருகிறது . தமிழகம் முழு வதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்  12-க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன .எனவே சாதிய ஆணவப் படு கொலையை தடுத்திட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்  பில் முன்னுரிமை வழங்க வேண் டும். மதுரை மாவட்டத்தில் ஆதிக்க சக்திகளின் தூண்டுதலின் பேரில் . மறைமுகமாகவும் , நேரடியாகவும் பட்டியலின / பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் நிகழ்த்துவது அதிகரித்து வருகின்றன . தீண்டா மைக் கொடுமைகளையும் ,/ சாதீய  வன்கொடுமைகளையும் முற்றிலு மாக அகற்றிட மதுரை மாவட்ட நிர்  வாகம் முன் வர வேண்டும், அதற்கு  பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு பிரச்சாரங்களை மேற் கொள்ள வேண்டும்.  மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டும்; ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து பட்டியலின மக்களுக்கு பகிர்ந்த ளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மதுரை மாவட்டத்தில் வசிக் கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மலைவேடன், காட்டுநாயக்கர் ஆகியோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு உள்ள கெடுபிடி யான விதிமுறைகளைத் தளர்த்தி நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்து  சாதி சான்றிதழ் கிடைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் .மதுரை  மாவட்டத்தில் உள்ள ஆதி திரா விடர் விடுதிகளில் அடிப்படை வசதி களை மேம்படுத்திட நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. 

மாநாட்டில் மதுரை மாவட் டத்தை மாநகர் - புறநகர் என்று இரண்டு மாவட்டக்குழுக்களாக பிரிக்கப்பட்டன. மாநகர் மாவட்டத் தலைவராக ஆர். சசிகலா, செயலா ளராக எம். பாலசுப்பிரமணியம், பொருளாளராக ஜா.நரசிம்மன் மற்  றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்பட  35 பேர் கொண்ட மாநகர் மாவட்டக்  குழு தேர்வு செய்யப்பட்டது.  புறநகர் மாவட்டத் தலைவராக செ.ஆஞசி, செயலாளராக செ. முத்துராணி, பொருளாளராக பி. மகாலிங்கம் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலா ளர்கள் உள்பட 35 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் புற நகர் மாவட்டச் செயலாளர் சி. ராம கிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.