districts

img

அதிகாரிகளின் பிடிவாதத்தால் எட்டப்படாத ஊதிய உயர்வு- தொடரும் வேலை நிறுத்தம்

இராமநாதபுரம்,அக்.19- வாலிநோக்கத்தில் இயங்குகிற அரசு உப்பு நிறுவனத்தில் செவ்வாயன்று இரண்டாம் நாள் வேலைநிறுத்தமும் ஆர்ப் ர்ப்பாட்டமும் நடைபெற்றது. அரசு உப்பு நிறுவன நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த னர். பேச்சுவார்த்தையில் பொது மேலாளர் தயானந்தன், உதவி மேலாளர் பிரேமா னந்தா, திட்ட மேலாளர் விஜயன், முன்னாள் பொது மேலாளர் டெல்லி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்க தரப்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, உப்பள சங்க தலைவர் கே பச்சம்மாள், உப்பள சங்க செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன், காட்டுராஜா,முருகவேல், தனிராம் ஆகியோர் கலந்து கொண்டனர். நான்கு சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. நிர்வாகம் தரப்பில் ஊதிய உயர்வு வழங்கு வதில் பிடிவாதமாக இருந்ததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் வேலை நிறுத்தம் தொடர்கிறது. எட்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு தர மறுத்த நிர்வாகம் தனது பிடிவா தத்தால் வேலை நிறுத்தத்திற்கு தொழிலா ளர்களை தள்ளியுள்ளது. நிர்வாகம் தனது பிடிவாதத்தை கை விட்டு ஊதிய உயர்வு வழங்குவதை உறுதி செய்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.