தஞ்சாவூர், அக்.13 - திருச்சி - தாம்பரம் இடையே வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ரயிலுக்கு தஞ்சாவூரில் மக்களவை உறுப்பினர் தலைமையில் பயணிகள் வரவேற்பு அளித் தனர். தஞ்சாவூர் - சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பி னர் ச.முரசொலி, காவிரி டெல்டா ரயில்வே உபயோ கிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் கோட்ட காப்பீட் டுக் கழக ஊழியர் சங்கம், மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை, மாவட்ட ஓய்வூதி யர் சங்கம் உள்பட பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு இரு வழித்தடத்திலும் புதிய விரைவு ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் வெள்ளிக் கிழமை தொடங்கியது. திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 5.35 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் காலை 6.25 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்தது. அப்போது மக்களவை உறுப் பினர் முரசொலி தலை மையில், பயணிகள் வர வேற்பு அளித்தனர். மேலும் ரயிலை ஓட்டி வந்த ஓட்டுந ருக்கு முரசொலி எம்.பி., பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டன. இதையடுத்து ரயிலை மக்களவை உறுப்பினர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினர் முரசொலி செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், “திருச்சியி லிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக தாம்பரத்துக்கு நண்பகல் 12.30 மணிக்கு சென்றடையும். இதேபோல, எதிர் வழித்தடத்தில் தாம்ப ரத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சிக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவை வாரத்தில் திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் இயங்கும். தொடர்ந்து 3 மாதங்களுக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்படும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. புதிய ரயி லால் அனைத்து தரப்பின ரும் பயனடைவர்” என்றார். நிகழ்ச்சியில் காவிரி டெல்டா ரயில்வே உபயோ கிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் க. நடராஜன், செயலர் வெ.ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் திரு மேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.