districts

img

போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் பேரவை

தூத்துக்குடி, செப்.3- தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நான்காவது ஆண்டுப் பேரவை தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றது. அமைப்பின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். முத்துகிருஷ் ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநில உதவித் தலைவர் ரைமண்ட் துவக்கவு ரையாற்றினார். மண்டலச் செயலாளர் வெங்கடாசலம்  அறிக்கையையும் மண்டலப் பொருளாளர் ராஜன் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் ஜெயபாண்டி, தமிழ்நாடு அரசு விரை வுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் மகாலிங்கம், மண்டலப் பொதுச்செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய சங்க பொதுச் செயலாளர் கர்சன் சிறப்புரை ஆற்றி னார். செங்கோட்டை அருணாச்சலம் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு: தலைவர் சேது  ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்ச லம், பொருளாளர் ராஜன் உட்பட 18 பேர் கொண்ட  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

;