திருவில்லிபுத்தூர், ஜூலை 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் ஒன்றி யம், வத்திராயிருப்பு பகுதிகளில் சேக ரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை வழங்கும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் சசி குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநிலச்செயற்குழு உறுப்பி னரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கத்திடம் 42 சந்தாக்களை மாவட்ட செயலாளர் அர்ஜுனன் முன்னி லையில் வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ,மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை, ஜோதிலட்சுமி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் நகர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராஜ பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில் சேகரிக்கப்பட்ட 28 சந்தாக்களை கட்சி யின் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தன குமார் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கி னார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜு னன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பி னர் ராமர் ,சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் நகரில் சேக ரிக்கப்பட்ட 32 சந்தாக்களை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் நகரச் செயலாளர் மாரி யப்பன் வழங்கினார்.