districts

img

அங்கன்வாடி மையங்களில் வீட்டு தோட்டம் அமைக்க விதைகள் மரக்கன்று தேனி ஆட்சியர் வழங்கினார்

தேனி ,ஏப்.3- போஷன் பக்வாடா இருவாரத்தினை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் மற்றும் மரக்கன்றுகளை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, வழங்கினார் . தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்;ச்சித்திட்டத்தின் சார்பில் போஷன் பக்வாடா இரு வாரத்தினை முன்னிட்டு மார்ச்-20 முதல்      ஏப்ரல்-03 வரை சிறுதானியங்கள் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு, பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில்,  தோட்டக்கலைத் துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 20 அங்கன்வாடி மைங்களில் வீட்டுதோட்டம் அமைப்பதற்கு விதைகள் மற்றும் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஊட்டச் சத்து உறுதிமொழியினை, அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.  இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் பி.மதுமதி, தாட்கோ பொது மேலாளர் சரளா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் இராஜ ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.