தேனி, டிச.6- நகை மதிப்பீட்டாளருக்கு ஓய்வு பெற்ற பின்னரும் 36 மாத சம்பளப் பாக்கியை தராததால் தொழிலாளர் நல நீதி மன்ற உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேனி அல்லிநகரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் வடபுதுப்பட்டியை சேர்ந்த முரு கேசன் என்பவர் 18 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாள ராக பணியாற்றி வந்துள்ளார். ஓய்வுபெற்ற இவருக்கு 36 மாதம் சம்பளம் பாக்கி மற்றும் பி.எப்., போனஸ் என ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் பணம் நிலுவையில் இருந்து வந்துள் ளது. இந்த பணத்தை வழங்கக் கோரி முருகேசன் மதுரை தொழிலாளர் நலவாரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முரு கேசனுக்கு வழங்கக்கூடிய தொகைக்கு அல்லிநகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தேனி மாவட்ட நீதிமன்ற அமீனா ரகுபதி ராமச்சந்திரன், வழக்கறி ஞர் மாரியப்பன் தலைமையில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.