பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருவில்லிபுத்தூர்,ஜூன் 11- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந் நிலை யில் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் மட்டன் ஸ்டால், மீன்மார்க்கெட், கோழிஇறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அன்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு கடைகளில் பயன் படுத்தப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. நகர்மன்ற கவுன்சில் கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திர னிடம் உரிமம் இல்லாத மட்டன் கடைகளை ஆய்வு செய்து உரிமம் எடுத்துக் கொண்டு நடத்துமாறு அறிவுறுத்து மாறு உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை அன்று சாலை ஓரங்களில் நகராட்சி உரிமம் பெறா மல் மட்டன் கடைகள் நடத்துபவரிடம் உரிய உரிமம் பெற்று தொழில் நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
தேனி அருகே கடையை உடைத்து பணம், சிகரெட் பண்டல் திருட்டு
தேனி, ஜூன் 11- தேனி அருகே பூதிப்புரத்தில் கடையை உடைத்து பணம், பீடி -சிகரெட் பண்டல் திருடியது தொடர்பாக பழனி செட்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. பூதிப்புரத்தை சேர்ந்த அன்பரசன் முக்கிய சாலையில் கடை வைத்துள்ளார். கடந்த வியாழனன்று இரவு 11 மணிக்கு கடையை அடைத்து சென்று விட்டார் .மறுநாள் வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டு ரூ 20 ஆயிரம் பணம், பீடி -சிகரெட் பண்டல்கள் காணாமல் போனது .இது குறித்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டி பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
இரு சக்கர வாகனத்தில் மாடு மோதி தொழிலாளி பலி
தேனி, ஜூன் 11- ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதியதில் அதில் பயணம் செய்த தொழிலாளி பலியானார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சத்யா நகரை சேர்ந்தவர் பாலு மகன் துரைபாண்டி .இவர் வேலைக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார் .க.விலக்கு அருகே இருசக்கர வாகனம் மீது எதிர்பாராமல் மாடு மோதியது .சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துரை பாண்டியும், மாடும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து க.விலக்கு சார்பு ஆய்வாளர் பிருந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆண்டிபட்டியில் கபடி போட்டி
தேனி, ஜூன் 11- ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது .எம்எல்ஏக்கள் ராமகிருஷ் ணன் மகாராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலா புரம் கிராமத்தில் திமுக தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தனர். இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெறும் இந்த போட்டியில் தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
மாணவியை அவதூறாக பேசிய நடத்துனர் சஸ்பெண்ட்
திருவில்லிபுத்தூர், ஜூன் 11- திருவில்லிபுத்தூர் - கலிங்கபட்டி பேருந்து சரியாக இயக்கப்படாதது குறித்து திருவில்லிபுத்தூர் போக்கு வரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் வெள்ளியன்று திருவில்லிபுத்தூரில் இருந்து கலிங்க பட்டிக்கு வந்த பேருந்தில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது அவரிடம் நடத்து நர் தங்கவேல், பேருந்து சரியாக வரவில்லை என உங் கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ளதாக கூறி மாணவி யை அவதூறாக பேசினார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எம்.எல்.ஏ ரகு ராமனிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த எம்.எல்.ஏ ரகு ராமன், சம்பந்தப்பட்ட நடத்துநர் மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது துறைரீதியிலான நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டதன் எதிரொலி யாக நடத்துனர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார்.