districts

img

ரூ.20 லட்சம் செலவில் அரசு தொடக்கப் பள்ளியை புனரமைத்த இளைஞர்கள்

சிவகங்கை, மார்ச் 19- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூ ராட்சிக்குட்பட்ட புதூர் பகுதி யில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை எழுச்சி இளை ஞர் குழுவினர் ரூ. 20 லட்சம்  செலவில் அழகுற புனர மைப்பு  செய்துள்ளனர். புனரமைத்த பள்ளிக் கட்டிடத்தை தமிழக கூட்டு றவுத் துறை அமைச்சர் பெரி யகருப்பன் திறந்து வைத் தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்  குமார், பேரூராட்சி தலைவர் நஷ்முதீன் ,இளையான்குடி சட்டமன்ற முன்னாள் உறுப் பினர் மதியரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில்,  கல்வி என்பது அழியாச் செல்வம். இந்த செல்வம் அனைவருக்கும் கிடைக்க அரசு தொடக்கப் பள்ளியை  இளைஞர்கள் மேம்படுத்தி யுள்ளனர். அவர்களுடைய பணி பாராட்டுக்குரியது. இப்பள்ளி தொடங்கி 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பத்து ஆண்டு களில் 100 ஆண்டை கடக்க  இருக்கிறது. நூறாம் ஆண் டில் இப்பள்ளியினுடைய மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை பல மடங்கு  உயர வேண்டும். அதற்கான  முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ஏற்  படுத்த வேண்டும். வகுப்பா சிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் . பெற் றோர் -ஆசிரியர் கழகம் சார்பாக ஆசிரியர்களை நிய மித்து வகுப்புகள் நடத்தப்  பட வேண்டும். இங்கு நாட்டி யம் ஆடிய நான்கு மாணவி களுக்கும் நிகழ்ச்சியின் தொடக்கமாக இறையருள் வாசித்த சிறுவனுக்கும் எனது சார்பாக ரூ. 5 ஆயிரம் வழங்கி மகிழ்கிறேன் என்று தெரிவித்தார் . மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் புதூர்  பள்ளி வாசல் தலைவர் தௌ லத்கான், செயல்அலுவலர் கோபிநாத், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தின் தலை வர் தமிழரசன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரி யப்பன் கென்னடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.