districts

img

விழிப்புணர்வு பிரச்சாரம்

சின்னாளபட்டி, ஜூலை 7-  சின்னாளபட்டியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்து கொடுப்பதற்கு திருநங்கை வி.என்.ராணி தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விருத்தாசலம் சிவசக்தி கலைக்குழுவினர் சின்னாளபட்டியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பெ.செல்வராஜ் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தங்கத்துரை வரவேற்று பேசினார். பிரச்சாரத்தில் சிவசக்தி கலைக்குழுவை சேர்ந்த கலைமாமனி விருதுபெற்ற பாடகி ஜெயலதா, கரகாட்ட கலைஞர் செல்வி, நடன கலைஞர் ராஜாத்தி, தவில் கலைஞர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

;