மதுரை,அக்.18- ஆதீன மடங்கள் தவறு செய்யும் போது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மதுரை ஆதீனத்திற்கு சொந்த மான 1200 ஏக்கர் நிலங்களை பாண்டிச் சேரி நிறுவனங்களுக்கு ஒத்திக்கு விட்ட ஒப்பந்த பத்திரத்தை இரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீன மடம் மிகவும் பழமை யான மடமாக இருந்து வருகிறது, இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழு வதும் பல்வேறு இடங்களில் சொத்துக் கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா வில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு பவர் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது சட்ட விரோதமானது. எனவே சட்ட விரோத மாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதி பதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. விசாரணையின் போது, ஆதீன மட சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதீன மடங்கள் மடங்களாக செயல் படுகிறதா ?இல்லை வியாபார நிறுவ னங்களாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர் .இது போன்று ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனு மதிக்கிறது. ஆதீன மடங்கள் அனைத்து மே இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. இது போன்ற செயல் களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் .அந்த நிலங்க ளில் சட்டவிரோதமாக மணல் ஏதும் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தர விட்டனர். வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.