இராமேசுவரம், ஜூலை 26- தனுஷ்கோடி அரிச்சல் முனையில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற கடலோர காவல்படையினர் ஹாவர் கிராப்ட் கப்பலில் ஜோதியை செவ்வாய்க்கிழமை கொண்டு சென்ற னர். மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதனை முன் னிட்டு பொதுமக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறு கிறது. இதன் தொடர்ச்சியாக, ராமநாத புரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தொடர் ஜோதி ஓட் டத்தை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்த ஜோதியை இந்திய கடலோர காவல் படை ஹோவர் கிராப்ட் உதவி கமாண்டர் நிஷிசர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, ஹோவர் கிராப்ட் கப்ப லில் அக்காள்மடம் கடல் பகுதியில் துடுப்பு படகு வீரர்களிடம் ஒப்படைத்த னர். அவர்கள் அங்கிருந்த பாம்பன் வரை கொண்டு வரப்பட்டது. அங்கி ருந்த வீரார்கள் மண்டபம் கடற்கரை பூங்கா வரை பேருந்து பாலத்தில் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சி யர் கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட வரு வாய் அலுவலர் காமாட்சி கணேசன், மண்டபம் பேரூராட்சி செயல் அலு வலர் அரசப்பன் மற்றும் மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.