தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வென்றனர். 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவன் அறிவு புகழேந்தி முதல் பரிசையும் கிருஷ்ணசாமி மூன்றாம் பரிசையும் பெற்றனர். மாணவிகளுக்காக போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 18 வயதுக்குட்பட்ட போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவன் ஆனந்த் மூன்றாம் இடம் பெற்றார். வென்ற மாணவர்களையும் உடற்பயிற்சி ஆசிரியர் தர்மராஜ் சக்திவேல் ஆகியோரையும் பள்ளித்தாளாளர் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் எம்.பி. முருகன், துணை முதல்வர் பி.ஜெயராமகிருஷ்ணன், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.