districts

img

மணிப்பூர் வன்கொடுமையைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 24- மணிப்பூர் வன்கொடுமை சம்ப வத்தைக் கண்டித்து இராமநாதபுரத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். குருவேல்  மாவட்டக் குழு உறுப்பினர் என் வெங்க டேஷ், தாலுகா செயலாளர் பி.செல்வ ராஜ், மலைவாழ் மக்கள் சங்க அமைப்பாளர் என்.ராமமூர்த்தி, மணிக்கண்ணு, அழகேந்திரன், வீரபாண்டி, பழனி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.ஜி.பாஸ்கரன், “இரண்டு பாஜக பெண்  சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்து  பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்  பூர் பாஜக மாநில அரசை ஒன்றிய அரசு  கலைக்க வேண்டும். பாஜக அரசு எங்கள் முதுகில் குத்திவிட்டது. எங்க ளால் வெளியில் மக்களிடம் தலை காட்ட  முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மாநில அரசு பதவி விலக வேண்டு”மென வலியுறுத்தினார்.

திண்டுக்கல்

மாதர், மாணவர், மலைவாழ் சங்கம்  சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச்  செயலாளர் ஜி.ராணி, மாவட்டச்செய லாளர் பாப்பாத்தி, வாலிபர் சங்க மாவட் டத்தலைவர் சிலம்பரசன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாண வர் சங்க மாவட்டத்தலைவர் முகேஷ்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  மாவட்டச்செயலாளர் தா.அஜாய் கோஷ், காளியப்பன், தங்கராஜ் தீண்  டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் தவக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.