மதுரை, ஏப்.5- மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஏப்ரல் 5 புத னன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கீழடி அருங்காட்சியகக் கல் மண்டபத்தில் நான் பிறந்தநாள் கொண்டாடியதாக தினமலர் நாளி தழ் புதனன்று புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நான் அறிந்தவரை, நாடாளுமன்ற உறுப்பினரான பின் முதன்முறை யாக எனது புகைப்படத்தை அவ் விதழ் வெளியிட்டிருக்கிறது. அதற்கு நன்றி. மார்ச் மாதம் 17ஆம் தேதி பிற் பகலில் நியூஸ் 7 தொலைக்காட்சி கீழடி அருங்காட்சியகத்தின் முக்கி யத்துவம் குறித்த விரிவான நேர் காணலை என்னிடம் பதிவு செய் தது. அந்த நேர்காணல் பதிவு முடிந்தவுடன் அத்தொலைக்காட்சி நண்பர்கள் எனக்கு நினைவுப் பரி சாகப் புத்தகம் வழங்கினர். தேனீர், கேக் உள்ளிட்ட நொறுக்குத்தீனி யை அனைவருக்கும் பகிர்ந்தனர். அருங்காட்சியகத்துக்கு வருகிற வர்கள், அங்குள்ள சிற்றுண்டி வளா கத்தில் திண்பொருட்களை வாங்கி ஓய்வாக அமர்ந்து சாப்பிடத்தான் அந்தக் கல்மண்டப இருக்கைப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் நியூஸ் 7 தொலைக் காட்சி நண்பர்கள் இந்தச் சிற் றுண்டிகளைப் பகிர்ந்தார்கள்.
கீழடியின் ஒன்பதாம் கட்ட அக ழாய்வினை தமிழக முதல்வர் நாளை (ஏப்.6) தொடக்கிவைக்கி றார். அதனைக் கொண்டாடும் வித மாக, தினமலர் தொலைக்காட்சி நண்பர்கள் எனக்கு அளித்த கேக் படத்தை பிரசுரித்ததில் கூடுதல் மகிழ்ச்சி. ஒன்றிய பாஜக அரசு எதுவும் இல்லை என சொல்லிக் கைவிட்டு வெளியேறிய இடத்தில், இன்று இந்திய வரலாற்றுத்துறையையே திரும்பிப் பார்க்கச் செய்யும் கண்டு பிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் வரலாற்று வளத்தை நவீன கல்விப்புல ஆய் வின் வழியே உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாக கீழடி அக ழாய்வு மையங்கள் இருக்கின்றன. இந்த அகழாய்வின் அடுத்தக்கட் டப் பணி தொடங்கும் இந்நன் னாளை கேக் வெட்டியோ, இனிப்பு கள் வழங்கியோ கொண்டாடு வோம். அதன் அடையாளமாக கேக் படத்தை தினமலர் வெளி யிடும் என எதிர்பார்க்கிறேன். தினமலர் இரா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் சங்க கால நாணய வியலில் நிபுணத்துவம் பெற்றவர். அவரின் வழியை தினமலர் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.