நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்? பழனி, ஜூன் 11- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கன் சமூகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சாதிச்சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் பழனி கோட்டாட்சியர் அலு வலகத்தால் பள்ளிப் படிப்பைத் தொடர முடி யாமல் இடைநிற்றலக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே அமைந்துள்ளது வாலியசெட்டிய பட்டி. இந்த கிராமத்தில் 94 காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கிறார்கள். இவர்களுக்கு அரசு பல நலத் திட்ட உதவிகள் செய்து கொடுத்தாலும் கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் 21 பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் சாதிச் சான்றிதழ் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் கல்வி உதவித்தொகை முற்றி லும் கிடைக்கவில்லை. சிரமப்பட்டு வட் டிக்குப் பணம் வாங்கிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடிய நிலை உள்ளது. பணம் கட்ட முடியாமல் வறுமைக்கோடி டிற்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள் கல்வி ஊக்கத்தொகை கிடைக்காததால் மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. அரசு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆன் லைன் திட்டத்தின் மூலம் பதிவேற்றம் செய்தால் அதிகாரிகள் பதிவேற்றத்தைக் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூன்று ஆண்டுகளாக கிடப் பில் போடப்பட்டிருக்கும் சாதிச்சான்றி தழை சரி பார்த்து ஆன் லைன் மூலம் பதி வேற்றம் செய்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பள்ளிக் கல்லூரி களில் படிப்பவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை கிடைக்கும், மேற்படிப்பைத் தொடர முடியும் என்கின்றனர் பாதிக்கப் பட்டவர்கள். இப்பகுதியில் 2011-ஆம் ஆண்டு 63 குடும்பங்களுக்கு நல வாரிய அட்டை கொடுக்கப்பட்டும் எந்த வித சலுகைகளை யும் இதுவரை அரசு வழங்கவில்லை. ஒன்றிய, மாநில அரசு பழங்குடியின ருக்காக ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கி றது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பெயரளவிற்கு நலவாரிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நலவாரிய அட்டை உள்ளவர்களுக்கும் கிடைக்காமல் உள்ள வர்களுக்கும் வழங்கி அரசின் நலவாரி யத்திட்டங்களை முழுமையாக வழங்க வேண்டுமென்கின்றனர் காட்டு நாயக்கன் சமூக மக்கள்.