districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டம்

சிவகங்கை, மே 10- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய பெனசன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் நிதி யமைச்சர் பேசிய பேச்சை திரும்பப்பெறக்  கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கையில் வட்டார தலைவர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். காளை யார்கோவில் தலைவர் லதா தலைமை  வகித்தார். செயலாளர் அருள்மொழி, மாநில துணைத் தலைவர் ஆரோக்கிய ராஜ் பேசினர்.  எஸ்.புதூரில் தலைவர் ஃபிராங்களின் தலைமை வகித்தார். தேவகோட்டை தலை வர் ராஜம்மாள் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி பேசினார்.

கல்லலில் ஆரோக்கிய லூயிஸ் லெவே  தலைமை வகித்தார். சாக்கோட்டையில் சப் துரை தலைமை வகித்தார். திருப்பு வனத்தில் மீனா தலைமை வகித்தார். இளை யான்குடியில் அமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தாமஸ் அமல நாதன் பேசினார். திருப்பத்தூரில் ஸ்ரீதர்ராவ் தலைமை வகித்தார். மானாமதுரையில் பாலக்குமார் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இராமநாதபுரம் திருவாடானை வட்டக்கிளை சார்பில் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு வட்டத்தலைவர் சுரேஷ்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட தலைவர் முருகேஸ்வரி, பேசி னார்.  சத்திரக்குடியில் அமைந்துள்ள போகலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தலைவர் ஆதித்தன் தலைமை தாங்கினார் .

திருவில்லிபுத்தூர் 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவில்லிபுத்தூர் கிளை சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது . வட்ட கிளை தலை வர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜகுரு, ஆகியோர் பேசினர். 

மதுரை

தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது.500 க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.