மதுரை, ஜூலை 11- மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர் மூன்றாமிடத்தை வென்றார். 36 ஆவது மாநில அளவிலான ஜூனியர் தடகளப்போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஜூலை 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட மதுரை சிஇஒஏ, பள்ளி மாணவர் ஆர்.திருமலை நம்பி 42.21 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாமிடத்தை வென்றார். வெற்றி பெற்ற மாணவனை சிஇஓஏ கல்விக் குழுமத்தின் தலைவர் சாமி, முதன்மை முதல்வர் கலா, முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி இயக்குநர் செல்ல முருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.