நிதி இல்லை என்று கூறுவது ஏற்படையது அல்ல; கடும் அபராதம் விதிக்க வேண்டும்: நீதிபதிகள்
மதுரை, டிச.17- வைகை ஆற்றில் எங்கெல்லாம் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச் சூழல் உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி ஒருங்கிணைந்த பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்த ரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணி பாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக் கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல் வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள்தான் அடர்த்தியாக காணப்படுகிறது.
வைகையில் தேனி, மதுரை, இராமநாத புரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்திருப்பதும் ஆய்வில் உறுதியாகி யுள்ளது. வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் இராமநாத புரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும் வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களி டம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகை மூலம் ஆற்றை மறுசீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் திங்களன்று விசார ணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பில், வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர். அதில் தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கின்றனர். 35 ஆண்டுகளாக கழிவுநீரை வைகை ஆற்றில் கலக்கின்றனர்.
எனவே, நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச் சூழல் உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி வைகை ஆற்றில் கழிவுநீர் நேர டியாக கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலந்து பேச உள்ள னர். எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். நிதி இல்லை என கூறுவது ஏற்பு டையது அல்ல. உள்ளாட்சி அமைப்புகள் எந்தவித மன உறுத்தலுமின்றி கழிவுநீரை வைகை ஆற்றில் கலக்கின்றன. வரும் காலங்களில் இது போன்று நடக்கக் கூடாது. கழிவுநீர் வைகையில் கலப்பதை தடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வைகையில் கழிவுநீர் கலப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். சிசிடிவி பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
எனவே, வைகை ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் ஏன் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே வைகை ஆற்றில் எங்கெல்லாம் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதை தடுக்க என்ன நடவ டிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச்சூழல், உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி கழிவுநீர் கலப் பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண் டும் ஒருங்கிணைந்த பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்தனர்.