districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிழற்குடை அமைத்திடுக!

விருதுநகர், மே 25- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் அகழாய்வுப் பணியில் ஈடு பட்டு வரும் தொழிலாளர்களுக்கு நிழற்  குடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்து தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங்கு  25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லி யல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே  தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து வெம்பக்  கோட்டையில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளுக்காக தமிழக அரசானது ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச்  16 ஆம்தேதி அமைச்சர் தங்கம் தென்ன ரசு முன்னிலையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வுக்காக தோண்டப்  பட்ட 15 குழிகளில், நுண் கற்காலம்  முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதி யில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்தன. அதன்படி தங்க அணிகலன், சுடு மண்ணாலான முத்திரை, ஆண் உரு வம், சுடுமண்ணாலான சங்ககால முத்  திரை, முழு சங்கு வளையல், இருபுற மும் உருவம் பதித்த செப்பு நாணயம்  உள்ளிட்ட மூவாயிரம் வகையான  பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன.

இதன் மூலம் நமது தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனி தர்கள் வாழ்ந்து வந்ததற்கான அடை யாளங்களை அறிய முடிகிறது. மேலும்,  பண்டைய மனிதர்கள் நாகரிகமும், தொழில்நுட்பங்களுடன் பல நாடுகளு டன் வாணிபத் தொடர்பில் ஈடுபட்டி ருந்தார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அக ழாய்வுப் பணிகள் ஏப்ரல் 6 அன்று  முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு  தற்போது வரை நடைபெற்று வரு கிறது. அப்பணிகள் நடைபெறும் இடங்களையும், அங்கு காட்சிப்படுத்  தப்பட்ட பண்டைய பொருட்களையும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.குருசாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டோம். மேற்படி அகழாய்வில் தொழிலா ளர்கள் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் பணியாற்றி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கண்காட்சியை பார்வை யிட வரும் பொது மக்களுக்குத் தேவை யான குடிநீர் வசதி அங்கு செய்து தர  வேண்டும். மேலும், அகழாய்வு நடை பெறும் இடத்திற்கு செல்லும் சாலையா னது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, அதை சீர் செய்திட  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளார்.