districts

img

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் கிராம கல்விக் கூட்டம்

குழித்துறை, நவ. 24- களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் கிராம கல்விக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி நய்மா, கிராம கல்விக் குழு தலைவர் சி. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் வரவேற்றுப் பேசினார். பள்ளி ஆசிரியர் ஞானதாஸ், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர் மு. ரிபாய் ஆகியோர் பேசினர். மேல்புறம் வட்டார பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பு பார்வையாளர் ஜி. ஜெயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆசிரியை எஸ். கே.  லேகா நன்றி கூறினார்.   பள்ளியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.