திருநெல்வேலி, மார்ச் 20- வேளாண்மை துறை பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்ட செயலாளர் செல்லத்துரை கூறுகையில், வேளாண்மை பட்ஜெட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த ரூ. 32 கோடி வீடுகளில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக் கீடு செய்திருப்பது, கரும்பு விவசாயி களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக் கத்தொகை வழங்கப்படும் மற்றும் தமிழ் மண் வளம் என்ற இணையதளத்தில் தொடங் கப்படும் ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சத வீத மானியம் வழங்கப்படும், விவசாயி களுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நட வடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அறி விப்புகள் மிகுந்த வரவேற்புகுரியது. மேலும் மதுரை அலங்காநல்லூரில் ஏற்க னவே செயல்பட்டு வந்த அரசு கரும்பு ஆலை யை திறக்க வேண்டும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் வழங்க வேண்டும், அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும். சிறுதானியங்கள் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடைத்தரகர்கள் உள்ளிட்ட முறை கேடுகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் நலனை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.