மதுரை, ஜன.29- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறு திப்படுத்திட வேண்டும். அகவிலைப் படி உயர்வை அமல்படுத்திட வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர் களின் பணப்பலன்கள் மற்றும் டிஏ உயர்வு மருத்துவ காப்பீடு போன்ற வைகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரை புறவழிச்சாலை அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க தலைவர் பி.எம்.அழகர்சாமி தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் ஏ. கனகசுந் தர், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ் விளக்கிப் பேசினர். மாநில சம்மேளான துணைத் தலைவர் வீ.பிச்சை, ஜி.ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் முருகேசன், சவுரி தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் பணிமனை முன்பு சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் ஏ.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை, சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். மேலும் இதில், மண்டல பொருளாளர் சின்னத்தம்பி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நல அமைப்பின் மாவட்ட செயலா ளர் தங்கப்பழம், எம்.கார்மேகம் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.