மதுரை, நவ.5- தலித் விடுதலை இயக் கம் சார்பில் மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் “நில மும்... உரிமைகளும்” என்ற தலைப்பில் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாநி லத் தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்தார். மாநி லப் பொதுச் செயலாளர் விடு தலை வீரன் துவக்கி வைத்தப் பேசினார். மாநில மாணவ ரணி செயலாளர் பீமாராவ், மாவட்டச் செயலாளர் மின் னல் வரதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நில உரிமை தென்மண் டல மாநாடு மதுரையில் டிசம்பர் இறுதியில் நடத்து வது என்றும் மதுரை மாவட் டம் வாடிப்பட்டி வட்டம் ,உசி லம்பட்டி வட்டம் ,மேலூர் வட் டங்களில் உள்ள பஞ்சமி நிலங்கள் மற்றும் இலவச வீட்டு மணைப்பட்டா பிரச்ச னைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தின் முன்பாக நவம்பர் மாத இறுதியில் மக்களை அணிதிரட்டி போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் நிலம் மீட்பிற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். நிலங்கள் பாதுகாக்க நில ஆணையம் அமைக்க வேண் டும். நில மீட்பு போராட்டங் களை தொடர்ந்து முன்னெ டுக்க இதர சனநாயக சக்தி களை ஒருங்கிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.