தேனி, ஜூலை 8- தேனி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு சிறப்பு மக்கள் மன்றத்தில் தீர்வு வழங்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும்இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டது.இதன் பேரில் சனிக்கிழமை தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சி.சஞ்சய்பாபா தலை மையிலும் குடும்ப நல நீதிமன்ற நீதி யரசர்.பி.சரவணன் முன்னிலையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நில ஆர்ஜித வழக்குகளும் 4 மோட்டார் வாகன வழக்கு கள் என மொத்தம் 9 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.அதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகை களை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறு வனங்களுக்கு உத்தரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.