districts

img

பள்ளியில் ஆர்.ஓ. சிஸ்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்

சின்னாளபட்டி, டிச.16- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப் ப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. சிஸ்டத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். குட்டத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய செல்வி சுதாமேரி நிதி யில் சுமார் ரூ.7லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ.பிளான்ட் சிஸ்டம் திறப்பு விழா நடை பெற்றது. விழாவிற்கு குட்டத்துப்பட்டி பங்குத்தந்தை ஜான் நெப்போ லியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் லெட்சுமி காந்த பாரதி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், திட்ட இயக்குநர் தினேஷ் குமார், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைப்பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் ஆர்.ஓ.சிஸ்டம் பிளான்டை துவக்கி வைத்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசி னார்.  மாணவர்களும் சிரமமின்றி கல்வி கற்க முடிகிறது என்ற தோடு இவ்வருடமும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவேன் என்று அமைச்சர் கூறினார்.