மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்; வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் செப்டம்பர் 20 அன்று நடைபெற்றது. 87 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.