districts

போக்குவரத்து காவலர்களுக்கு கண்காணிப்பு கேமரா வழங்கல்

தூத்துக்குடி, செப். 29 தூத்துக்குடி மாவட்டத் தில் போக்குவரத்து காவல் துறையினருக்கு உடம்பில் அணியும் (Body Worn Camera) 6 கேமராக்களை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன் பாட்டுக்கென தமிழக அரசு ரூ.1,34,000/- மதிப்புள்ள 6 உடம்பில் அணியும்  புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை (Body Worn Camera and Storage Device) வழங்கி யுள்ளது. இந்த கேமராக்க ளை போக்குவரத்து காவல் துறையினர், தங்கள் சட்டை யில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணி களை மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் நடை பெறும் சம்பவங்களை வீடி யோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்ய வும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது. இதை காவல்துறையி னர் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்கு வரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு 4 கேமராக்க ளும், கோவில்பட்டி போக்கு வரத்து பிரிவு காவல் நிலை யத்திற்கு ஒரு கேமாராவும்,  திருச்செந்தூர் போக்கு வரத்து பிரிவு காவல் நிலை யத்திற்கு ஒரு கேமராவும் என மொத்தம் 6 கேமராக்களை வியாழனன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு வழங்கி, இதன் செயல் பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி  மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வளார் லதா, உதவி ஆய்வாளர்  திரு நாவுக்கரசு, மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாகரா ஜன் உள்ளிட்ட காவல்துறை யினர் உடனிருந்தனர்.