districts

img

நிலக்கோட்டையில் அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கிடுக!

சின்னாளப்பட்டி, ஜன.25- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரெஜினா நாயகம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாத்துரை, பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் யாகப்பன் வரவேற்றார், கூட்டத்தில் எதிர்வரும் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பழுதடைந்த கிரா மப்புற ஆழ்துளைக் கிணறுகளையும் மேல்நிலைத்தொட்டிகளையும் ஆய்வு  செய்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது, அப்போது கவுன்சிலர் கணேசன் பேசுகையில், இந்தாண்டு இப்பகுதியில் நல்லமழை பெய்து பெரும்பாலான நீர்  நிலைகள் நிரம்பியுள்ளதால் நூத்துலா புரம் ஊராட்சியில் அனைத்து வீடு களுக்கும் ஊராட்சி சார்பில் இலவச குடி நீர் இணைப்புகள் வழங்க வேண்டும் என  கோரிக்கை வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் நன்றி கூறி னார்.