திண்டுக்கல், டிச.16- பழனியில் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்காக துவங்கப்பட உள்ள மனநல காப்பகத்திற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வும் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். பழனி கோவிலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளை யும் செய்து தர வேண்டும் என்று வலி யுறுத்தி பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முற்றுகையிட்டு , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பழனி நகர தலைவர் காளீஸ்வரி, பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். பழனி நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார் மற்றும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து சங்க தலைவர்களுடன் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை யில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக இணை ஆணையர் உறுதி யளித்தார்.
பழனியில் புதிதாக துவங் கப்பட இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான காப்பகத்தின் மராமத்து வேலைகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் தங்குமிடம், சின்னக்கலையமுத்தூர் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி, பட்டத்து விநாயகர் கோவில் திருமண மண்டபம், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள், ஒட்டன் சத்திரம் குழந்தை வேலப்பர் திருக்கோ வில், பழனி திருஆவினன்குடி கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் மற்றும் வெஸ்டர்ன் கழிப்பறை வசதி ஆகியவற்றை ஒரு மாத காலத்திற் குள் ஏற்படுத்தி கொடுப்பது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் பணியமர்த்தப் படும் தனியார் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களி லும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தர மற்றும் தற்காலிக வேலைக்கு எடுப்பது தொடர்பாக சாத்தியமானவற்றை ஆராய்ந்து வேலை கொடுக்க வேண் டும். ரோப்காரில் உள்ளது போல வின்ச் நிலையத்திலும் லிப்ட் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், அன்னதான கூடத்தில் சாய்வுதளம் அமைக்கவும் தேவையான ஆய்வுகளை செய்வது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தரு வதாக இணை ஆணையர் உறுதி யளித்தார். (நநி)