சிவகங்கை, அக்.7- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வட்டத்திற்குட்பட்ட அண்ணா நகரில் தென்னக இரயில்வேக்கு தற்கா லிக சொந்தமான இடத்தில் குடியி ருந்துவரும் 95 குடும்பங்களையும் இரயில்வே நிர்வாகம் காலிசெய்யுமாறு கூறியதைக் கண்டித்து தலித் விடு தலை இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் அக்டோபர் 6 அன்று மானாமதுரை வட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மானாமதுரை வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, அண்ணாநகரில் இரயில்வேக்கு தற்காலிக சொந்தமான இடத்தில் குடி யிருந்து வரும் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும். அனைத்து வித மான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.இப்பகுதியில் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளதைப் போல, அண்ணா நகரில் குடியிருக்கும் ஏழை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அண்ணாநகரில் இரயில்வேக்கு தற்காலிக சொந்தமான இடத்தில் குடியி ருந்துவரும் பொதுமக்கள் அனைவ ருக்கும் ஒரே இடத்தில் பட்டா வழங்கிய பின்னரே குடியிருப்புகளை அகற்றிட வேண்டும் என்று வட்டாட்சியரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அண்ணா நகர் மக்களின் கோரிக்கை யை மாவட்ட ஆட்சியர், ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். இதன் பின்னரே போராட்டம் முடிக்கப்பட்டது என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா தெரி வித்தார். கூட்டத்தில் மானாமதுரை காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலித் விடுதலை இயக்கத் தலைவர் ச. கருப்பையா, பொதுச்செயலாளர் விடு தலை வீரன், மக்கள் தேசம் கட்சி குரு விஜயன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா, திராவிடத்தமிழர் கட்சி சு.க.சங்கர், ஆதித்தமிழர் பேரவை இரா.செல்வம், தமிழ்ப்புலிகள் கட்சி தமிழ்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.