பொங்கல் பண்டிகை : அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மதுரை, ஜன.6- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையில் இருந்து 280 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 610 பேருந்துகளும் ( திருச்சி - 135. திருப்பூர -80 . கோவை -120 . திருநெல்வேலி -35 . நாகர்கோவில் -35 , திருச்செந்துரர் -30 , மற்றவை -175) மற்றும் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 16.01.2023 முதல் 18.01.2023 வரை சென்னைக்கு 275 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 625 பேருந்துகளும் ( திருச்சி - 138. திருப்பூர -77 , கோவை -121 , திருநெல்வேலி -35 , நாகர்கோவில் -35. திருச்செந்தூர் -30 , மற்றவை -189 ) பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும் , முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள்/ கண்காணிப்பாளர்கள் / பணியாளர்கள் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 11.15 லட்சம் வாக்காளர்கள்
தேனி,ஜன.6- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 அன்று வெளி யிடப்பட்டது. மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வை யாளர் சிஎன்.மகேஸ்வரன் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் க.வீ.முரளீதரன் இப்பட்டியலை வெளியிட்டார். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 1,34,925 ஆண்கள், 1,38,430 பெண்கள். இதரர் 30 பேர் என மொத்தம் 2,73,385 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் தொகுதியில் 1,39,439 ஆண்கள், 1,44,958 பெண்கள்,இதரர் 112 பேர் என மொத்தம் 2,84,509 வாக்காளர்கள் உள்ள னர். போடி தொகுதியில் 1,34,151 ஆண்கள்,1,40,552 பெண்கள், இதரர் 20 பேர் என மொத்தம் 2,74,723 வாக்கா ளர்கள் உள்ளனர். கம்பம் தொகுதியில் 1,38,171 ஆண்கள், 1,44,735 பெண்கள், இதரர் 33 பேர் என மொத்தம் 2,82,939 வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டத் தில் 5,46,686 ஆண் வாக்காளர்கள், 5,68,675 பெண் வாக்காளர்கள்,இதரர் 195 பேர் என மொத்தம் 11 லட்சத்து 15 ஆயி ரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர். இப்பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர் சரியான விவரங்களுடன் இடம்பெற்றுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ளலாம். பெயர்விடுபட்டவர்கள் தொடர் திருத்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் க.வீ.முரளீ தரன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் உத்தமபாளையம், பெரியகுளம் கோட்டாட்சியர்கள் ரா.பால் பாண்டி, கி.சிந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) க.அன்பழகன், தேர்தல் வட்டாட்சியர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்
திண்டுக்கல், ஜன.6- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் ஜனவரி 5 வியாழ னன்று வெளியிட்டார். .திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் -பழனி சட்டமன்ற தொகுதியில் 1,34,904 ஆண் வாக்கா ளர்கள், 1,41,721 பெண் வாக்காளர்கள், 54 இதரர்கள் என மொத்தம் 2,76,679 வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,15,337 ஆண் வாக்காளர்கள், 1,23,087 பெண் வாக்காளர் கள், 10 இதரர்கள் என மொத்தம் 2,38,434 வாக்காளர்கள் உள்ளனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,40,685 ஆண் வாக்காளர்கள், 1,52,215 பெண் வாக்கா ளர்கள், 25 இதரர்கள் என மொத்தம் 2,92,925 வாக்காளர்கள் உள்ளனர். நிலக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,22,253 ஆண் வாக்காளர்கள், 1.27,439 பெண் வாக்காளர்கள், 13 இதரர்கள் என மொத்தம் 2,49,705 வாக்காளர்கள் உள்ளனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,39,035 ஆண் வாக்காளர்கள், 1,45,724 பெண் வாக்காளர்கள், 57 இதரர்கள் என மொத்தம் 2,84,816 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,33,946 ஆண் வாக்காளர்கள், 1,42,039 பெண் வாக்காளர்கள், 53 இதரர்கள் என மொத்தம் 2,76,038 வாக்காளர்கள் உள்ள னர். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,30,125 ஆண் வாக்காளர்கள், 1,36,168 பெண் வாக்காளர்கள், 2 இதரர்கள் என மொத்தம் 2,66,295 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 9,16.285 ஆண் வாக்காளர்கள், 9,68,393 பெண் வாக்காளர்கள், 214 இதரர்கள் என மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1205 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ,வட்டாட்சியர் அலுவ லகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன் தெரி வித்தார்.
குட்கா வைத்திருந்தவர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு
மதுரை, ஜன.6- தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்தி ருந்த நபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சுகாதார பணிக்கு ரூ. 50 ஆயிரம் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் ரூ.1 லட்சத்து 31 ஆயி ரத்து 700 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோ தமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளி யன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடைபெற்றது. நீதிபதி, மனுதாரரின் சிறைகாலத்தை கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் மனு தாரருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க முனைகிறது. மனுதாரர் ரூ.50 ஆயி ரத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னைக்கு சுகாதார பணிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.மேலும் நன்கொடை செலுத்தியதற்கான ரசீதை ரூ. 10 ஆயி ரத்திற்கான பத்திரத்துடன் சேர்த்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.
மயிலாடும்பாறை ஊராட்சித் தலைவரின் கணவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
கடமலைக்குண்டு,ஜன.6- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த வர் ராஜா. இவருக்கு மயிலாடும்பாறை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை ராஜா ஆக்கிரமித்து முருங்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலை வரின் கணவர் அன்பில்சுந்தரபாரதம் புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டுமானால் தனக்கு 1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் கேட்டுள்ளார். ஆனால் ராஜா பணம் தர மறுத்துவிட்டார். இதையடுத்து கடந்த 03.01.2023 அன்று அன்பில் சுந்தர பாரதம் அத்துமீறி ராஜாவின் தோட்டத்திற்கு சென்று அங்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 25க்கும் மேற்பட்ட முருங்கை மரங்களை ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினார். அப்போது தடுக்க முயன்ற ராஜாவை, அன்பில் சுந்தர பாரதம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் சாதி குறித்து இழிவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த ராஜா கடந்த 3ம் தேதி இரவு அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஜனவரி 6 அன்று ராஜா அளித்த புகாரின் பேரில் அன்பில் சுந்தர பாரதத்தின் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கட மலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகாசி பட்டாசு ஆலை பணியாளர் கொலை
சிவகாசி, ஜன.,6- சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அதே பட்டாசு ஆலையில் ஓட்டுநராக இருந்த சாத்தூர் படந்தாலை சேர்ந்த கருப்பசாமிக்கும், ரூபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பசாமியும், ரூபாவும் தனிமையில் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்த பாண்டி செல்வம்,அருகில் கிடந்த கட்டையால் கருப்பசாமியை தாக்கினாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து பாண்டி செல்வத்தை கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
அருப்புக்கோட்டை, ஜன.6- அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் வங்கி யில் ரூ.85 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மற்றொரு வங்கியில் ரூ.35ஆயிரம் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் இருக்கையின் கீழ உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்பு, அதை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது, பெட்டியில் இருந்த பணம் மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவை திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காலமானார்
மதுரை,ஜன. 6- மதுரை அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது 66) என்பவர் வியாழனன்று இரவு காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு அலுவலக கிளைச் செயலாளர் டி.கரைச்சாமியின் மனைவி ஆவார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மூத்த தலைவர் சி.ராம கிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, வி.உமாமகேஸ்வரன், த.செல்லக்கண்ணு, வி. பி. முருகன், செ. முத்துராணி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று காலை நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், மதுக்கூர் ராமலிங்கம், விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் தொலைபேசி மூலம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
போலியான தையல் இயந்திரம் கொடுத்து நூதன மோசடி : பெண் கைது
திண்டுக்கல்,ஜன.6- திண்டுக்கல் அருகே குறைந்த விலைக்கு தையல் இயந்திரங்கள் வாங்கித் தருவதாக கூறி போலியான தையல் இயந்திரம், போலி பில் கொடுத்து நூதன மோசடி செய்த பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிகோட்டையை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள்(46) என்பவர் குறைந்த விலையில் தரமான தையல் மிஷின்கள் வாங்கித் தருவதாக கூறி சின்னாளபட்டியை சேர்ந்த சௌடேஸ்வரி என்பவரிடம் ரூ. 5 லட்சம் பணம் பெற்றுள்ளார். தரமற்ற தையல் மிஷின்கள், போலி பில் கொடுத்த தாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் முத்தமிழ் செல்வி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து முத்துப் பாண்டியம்மாளை கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலி பணிநியமன ஆணை கொடுத்து மோசடி ஊர்க்காவல் படை வீரர் கைது
திண்டுக்கல்,ஜன.6- திண்டுக்கல்லில் வேலை வாங்கித் தருவதாக போலி நியமன ஆணை கொடுத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மல்லனம்பட்டி யை சேர்ந்தவர் விஜயகுமார்(36). இவர் சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி சங்கப்பன், சகாயராஜ், ஆண்டவர், கவிரத்னா ஆகிய 4 பேரிடம் ரூ.17 லட்சம் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை கொடுத்ததாக மாவட்ட எஸ்பி.பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து போலி நியமன ஆணை கொடுத்த விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
கடமலைக்குண்டு, ஜன.6- தேனி மாவட்டம். வருசநாடு போலீசார் வெள்ளிக் கிழமை தும்மக்குண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீலமுத்தையாபுரம் கிராமத்தில் மூலவைகை ஆற்று பாலத்தில் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தும்மக்குண்டு கிராகாமத்தை சேர்ந்த ஜோதிபாசு (வயது 42) என்பவ ரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாருக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி
தேனி,ஜன.6- தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி ஜனவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. ஆகவே பொதுமக்கள், கால்நடை மேய்ப்பவர்கள் இப்பகுதிக்குள் வர வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவின்உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் தரச்சான்று பெற்ற தங்கக்காசுகளை வழங்க ஏற்பாடு
மதுரை, ஜன. 6- மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டி களை நடத்துவது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது, இதில் அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அதிகாரி கள், விழா கமிட்டியினர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அப்போது காளை உரி மையாளர் ஒருவர் பேசுகை யில், “மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் வழங்க கூடிய தங்க காசுகள் தரமற்ற தாக காற்றில் பறக்கும் அளவிற்கு வழங்குவதாக குற்றம் சாட்டினா், அப்போது அமைச்சர், அப்படியெல்லாம் இல்லை என கூறியதால் சிறிதுநேரம் வாக்குவாதம் நடைபெற் றது. இதனையடுத்து பேசிய அமைச்சர் ,இந்த ஆண்டு தங்க காசு பரிசுகளை பெறும் போது தரச்சான்று பெற்ற தங்க காசுகளை வழங்குவோம் என பதில ளித்தார், இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள், போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது காளை உரிமையாளர்களின் பெ யரை குறிப்பிடும் போது சாதி பெயர்களை கூற அனுமதி அளிக்கக் கூடாது எனவும், காளை உரிமையாளரின் பெயரை மட்டும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அமைச் சர் நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார், இதனை தொடர்ந்து போட்டி யை பாதுகாப்பாக நடத்து வது குறித்து பாதுகாப்பு வேலிகள் அமைப்பது, குடி நீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம், காளை களுக்கான பாதுகாப்பு, வீரர்களுக்கான உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரி கள் ஆலோசித்தனர், கூட்டத்தில் பேசிய அமைச் சர் மூர்த்தி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் , பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய காளைகள் வரிசையில் நிறுத்தி வைக்கும்போது காளைகள் வெயிலில் நிறுத்தாமல் இருக்கும் வகையில் நிழற்பந்தல்கள் முழுவதுமாக அமைக்க வேண்டும் என அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்க வேண்டும் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை, ஜன. 6 - தமிழகத்தில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரி கள் தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவேண்டும் என்று தமிழக அரசு வலி யுறுத்தியுள்ளது. புதுடில்லியில் வெள்ளி யன்று (ஜன.6) ஒன்றிய சுகா தாரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்ட வியாவை மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள மருத்து வத் துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கி னார். அதன் விவரம் வரு மாறு: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறை வேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அர சுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடிய ரசுத் தலைவரின் ஒப்புத லைப் பெற்றுத்தர வேண் டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரை ந்து நிறுவ வேண்டும். கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்க வேண்டும். புதிதாக தொடங் கப்பட்ட ஆறு மாவட்டங்க ளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ ஒப்புதல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவ ஒப்புதல் வழங்க வேண்டும். உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர வழிவகை காணவேண்டும். தமிழ்நாட்டி ற்கு கொரோனா தடுப்பூசி மருந்து கூடுதலாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பதினைந்தாவது நிதி ஆணையம் 2022-23 நிதி யாண்டிற்கு ஒப்புதல் அளித்த நிதியை உடனடி யாக விடுவிக்க வேண்டும். அனைத்திந்திய ஒதுக்கீட்டி ற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப் படாமல் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநி லத்திற்கு ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற் படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு மாநில அரசு ஆட்சேபணை தெரிவித்தும் ஒன்றிய அமைச்சரிடம் மாநில அரசு சார்பில் கடிதம் அளிக்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார்,தமிழ்நாடு இல்ல முதன்மை செயலாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி மற்றும் உயர் அலுவலர்கள் அப்போது உடனிருந்தனர்.
மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கோரி முற்றுகை போராட்டம் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை, ஜன.6- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தண்டையார் பேட்டையில் சிங்காரவேலர் சிந்தனை கழகத்தில் மாநில செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி.குமார் பங்கேற் றார். மாநில பொதுச் செயலாளர் எஸ். அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெயசங்க ரன் மற்றும் மாநில நிர்வாகிகள் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மீனவர் நல வாரிய உறுப்பினர்களிடம் ஆண்டு சந்தா பெற்றும், மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் கம்பெனிகள், மீன்பிடி தொழிலா ளர்கள் பயன்படுத்தும் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற மீன்பிடி சார்ந்த தொழில்கள் மூலம் பணம் வசூ லித்தும், லட்சக்கணக்கில் வாரியத்தில் இருப்பு இருந்தும் மீனவர்களுக்கு வாரி யத்தில் கடந்த கால ஆட்சியை போல தற்போதைய தமிழக அரசும் ஓய்வூதியம் மறுப்பதை கண்டித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதர வாரியங்கள் போல் தொழிலாளர் நலத்துறை மூலம் தனி அலுவலர், அலுவல கம் அமைத்து மீனவர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், மீனவர் நல வாரியத்தில்பெண்களுக்கு ஓய்வூதியமாக 55 வயதிலும் ஆண்களுக்கு 60 வயதிலும் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும் என சட்டமன்றம் கூடுவதை முன்னிட்டு மீனவர் மானிய கோரிக்கைகளை முன்வைத்து வட சென்னை காசிமேட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் முன்பாக பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மாபெரும் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி பேரணி மீனவர்களின் கோரிக்கையை முன் வைத்து ஏப்ரல் 3 அன்று தில்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெரும் மாபெரும் மீனவர்கள் பேரணியை வெற்றிகரமாக்கிட தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை திரட்டி பங்கேற்பது எனவும் மீனவர்களின் கோ ரிக்கை முன்வைத்து மாநில அளவில் கோரிக்கை மாநாடு தஞ்சாவூரில் ஜூன் 3 அன்று நடத்துவது எனவும் இந்தகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜி.செலஸ்டின் (தலை வர்), எம்.கருணாமூர்த்தி (செயல் தலைவர்), எஸ்.அந்தோணி (பொதுச்செய லாளர் ), எஸ்,ஜெயசங்கரன்(பொருளாளர்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தேனி.ஜன.6- தேனி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் துரைப்பாண்டி (35), பாண்டீஸ்வரன்(32), தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர்கள் கோபிநாத்(31), ராஜா(29),குமார்(26). இவர்கள் மீது கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்க ரே பரிந்துரையின்பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப் பட்ட இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.