நாகர்கோவில், செப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட வட்டார-இடைக் குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அரசியல் பயிற்சி முகாம் சனிக்கிழமை (செப்.3) கன்னியாகுமரியில் தொடங்கியது. முதல்நாள்அமர்வில் மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.பத்ரி, கே.ஜி. பாஸ்கரன் மற்றும் ஆர். சுதிர் ஆகியோர் பேசினார். அமர்வுகளுக்கு மாநி லக்குழு உறுப்பினர் லீமா றோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம்.அஹமது உசேன் தலைமை வகித்தார். ஞாயிறன்று நடை பெறும் இரண்டாவது நாள் அமர்வில் முதல் அமர்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என். குண சேகரன், க. கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.