திண்டுக்கல், செப்.23- திண்டுக்கல் மாநக ராட்சிக்கு உட்பட்டது ராணி மங்கம்மாள் காலனி எனப் படும் ஆர்.எம்.காலனி. 1 முதல் 12 கிராஸ் தெருக்கள் உள்ள நகரத்தின் மிக முக்கி யமான பகுதியாகும். இந்த பகுதியில் தான் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் திண் டுக்கல் சீனிவாசன், வேட சந்தூர் சட்டமன்ற உறுப்பி னர் காந்திராஜன், முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மற் றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், வியாபாரிகள் என முக்கிய புள்ளிகள் வசிக்கக்கூடிய பகுதியாகும். இந்த ஆர்.எம்.காலனி யில் 8-ஆவது கிராஸ் பகுதி யிலும் பல முக்கிய பிர முகர்கள் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் 4 மாதங்க ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சாலை அமைப்பதா கக் கூறி ஜல்லிக் கற்களை கொட்டிவிட்டு சென்றனர். 4 மாதமாகியும் சாலை அமைக் கப்படவில்லை. இந்த சாலை யில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்றும் நடந்து செல்வோர் இடறி விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். இந்த வார்டு சாலை பணி அமைக்கப்படுவதில் தொடர்ந்து புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் மாமன்ற உறுப்பினரி டமும், மாநகராட்சி ஆணை யரிடமும், மேயர், துணை மேயர் என பலதரப்பிலும் புகார் கொடுத்தும் மாநக ராட்சி நிர்வாகம் மெத்தன மாக உள்ளது. சாலை அமைக்கப்படாமல் நகராட்சி யின் மெத்தனம் காரணமாக இப்பகுதியில் குப்பை வண்டிகளும் இந்த பகு திக்குள் வருவதில்லை. இத னால் மக்களுக்கு நோய் தொற்று பயம் ஏற்பட்டுள் ளது. ஜல்லிக் கற்கள் பரப் பப்பட்ட இந்த சாலையில் குழந்தைகள், பெரியவர்கள் என பலர் நடந்து செல்வ தில் கூட பெரும் அவதிப்படு கிறார்கள். மாநகராட்சி நிர்வா கம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.