மதுரை, டிச.21 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் துவங்க உள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் நடைபயணம் அரிட்டாபட்டி மந்தையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நடைபயணத்தை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, மதுரை துணை மேயர் நாகராஜன், திரைப்பட இயக்குநர் கௌதம் ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்த னர்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை, கிடாரி பட்டி ஆற்றுபாலம் அருகிலிருந்து நடைபய ணம் துவங்கியது. நடைபயணத்தை கிடாரி பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா மதிவாணன் துவக்கி வைத்தார். கிடாரிபட்டி யில் துவங்கிய நடைபயணம் மாங்குளம், மீனாட்சிபுரம், கழுங்குப்பட்டி, பெருமாள் பட்டி, வெள்ளரிப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக வந்து நரசிங்கம்பட்டியில் நிறை வடைந்தது.
நடைபயணத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநில துணைத் தலை வர் டி.செல்வி, மதுரை புறநகர் மாவட்டத் தலை வர் கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் தமிழர சன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், மாநகர் மாவட்டத் தலைவர் பாவல் சிந்தன், மாவட்டச் செயலாளர் செல்வா, மாவட்டப் பொருளாளர் வேல்தேவா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கா.பிருந்தா, மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், முன்னாள் தாலுகா தலைவர் எஸ்.பி.மணவாளன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
நடைபயணத்திற்கு வாழ்த்து
இந்த பயணக் குழுவை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், வாலிபர் சங்க மாநிலச்செயலாளர் எஸ். பாலா, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.
விவசாயிகள் சங்கம் வரவேற்பு
பெருமாள்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன், மாவட்ட துணைச் செயலா ளர் பி.தனசேகரன், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.எஸ்.ராஜாமணி மற்றும் ஏ.ராஜேஸ்வரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.தனசேகரன், துணைச் செயலாளர் எஸ். மாயாண்டி, சிஐடியு தாலுகா தலைவர் எஸ்.பி.மணவாளன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நடைபயணத்திற்கு கிராம மக்கள் மற்றும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நரசிங்கம்பட்டியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.சாமுவேல்ராஜ் வாழ்த்திப் பேசினார்.
மூன்றாம் நாளான ஞாயிறன்று, நடைபயணம் தெற்குதெரு, விநாயகபுரம், கல்லம்பட்டி, சூரக்குண்டு, செக்கடி, சந்தப்பேட்டை வழியாக வந்து, மேலூர் பேருந்து நிலையம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மக்களின் உற்சாக பேச்சு
மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பேசுகையில், இந்த மண், எங்கள் மண் மலை; எங்கள் மலை; இதனை காக்க எங்கோ இருந்து இந்த பிள்ளைகள் வந்துள்ளார்கள். இந்த பிள்ளைகள் முன்னால் நாங்கள் கும்பிடகூடிய தெய்வம் நிற்கும். மலையில் இருக்கக் கூடிய அய்யனாரிலிருந்து அனைத்து தெய்வங்களும் துணை நிற்கும்” என்றார் கலங்கிய கண்களுடன்.
கடவுளாக வாலிபர் சங்கம் இருக்கிறது
மீனாட்சிபுரம் காலனி மக்கள் உற்சாக வரவேற்பளித்து மூதாட்டி ஒருவர் கூறுகையில், “எங்களை யும், எங்கள் மக்களையும் காக்க கடவுள் இருக்கிறார். கடவுளாக வாலிபர் சங்கம் இருக்கிறது” என்றார்.
“கள்ளன் திரியல இருந்து நடந்தே வருகுதுகலாம் இந்த பிள்ளைகள்... வெயில் என்று பாராமல் நம்ம ஊரை பாதுகாக்க இவங்க எல்லாம் வாராக; நாமளும் இவங்க போராட்டத்துல கலந்துக்கணும். ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் பொதுக்கூட்டம் நடக்குது; அதுக்கு நம்ம எல்லாரும் போகணும்; அப்ப தான் நம்ம ஊர காப்பாற்ற முடியும்” என்று பெருமாள் பட்டியில் வரவேற்பின் போது அங்கு குடி யிருந்த பெண்கள், மூதாட்டிகள் அவர்களுக் குள் கிராமத்து பாணியில் பேசினர்.
நரசிங்கம்பட்டி கிராம மக்கள், “எங்களின் பேரன்கள்-பேத்திகள் உங்களை வரவேற்கிறோம். விடமாட்டோம்! விட மாட்டோம்! எங்கள் மண்ணை, எங்கள் மலையை எடுக்க விட மாட்டோம்... எங்களை தாண்டி ஊருக்குள்வர முடியாது. வாலிபர் சங்கத்தின் கூடவே நாங்கள், எங்கள் ஊர் இளைஞர்கள் இருக்கிறோம்” என்றனர்.