பழனி ஒன்றியம் ஆயக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மருத்துவர்கள் அங்கே தங்கி சிகிச்சை அளிக்கக்கோரி ஆயக்குடி பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களுடன் கோரிக்கை மனு வியாழனன்று திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டது .கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக இணை இயக்குனர் உறுதி அளித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி. ராணி, மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி, பழனி ஒன்றிய செயலாளர் ஜி. கௌரி ஆகியோர் மனுவை வழங்கினர்.