மதுரை, ஜூன் 21- மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரத்தை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மதுரையில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் கே.அலாவுதீன் தலைமை வகித் தார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.லூர்து, மாவட்டக்குழு உறுப்பினர் பி. முகமது அலி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மதுரை துணை மேயர் டி. நாக ராஜன் துவக்கி வைத்து பேசி னார். பல் சமய உரையாடல் குழு செயலர் அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பா ளர் அவ்தா காதர், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் டி. செல்வராஜ் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன் நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் சார்பில் என். பஷீர் அகமது மற்றும் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் என். கணே சன் மூர்த்தி, பொருளாளர் எம். ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ - மாணவியர்களின் (ப்ரி மெட்ரிக் ) கல்வி உதவித் தொகை மற்றும் சிறுபான்மையினர் ஆராய்ச்சி மாணவர்களின் மௌ லானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.